தொடரும் வியாபம் ஊழல் மர்ம மரணங்கள்: இன்று ம.பி மருத்துவக் கல்லூரி டீன் டெல்லியில் மரணம்
டெல்லி: வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு குழுவுக்கு உதவி செய்து வந்த மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் டீன் இன்று காலை டெல்லியில் உள்ள ஹோட்டலில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை செய்ததில் பல கோடிக்கு ஊழல் நடந்ததும், அதில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு குழுவுக்கு மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு நடத்தும் என்.எஸ். மருத்துவ கல்லூரியின் டீனான டாக்டர் அருண் சர்மா(64) உதவி செய்து வந்தார். அதாவது நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் குறித்த விவரங்களை அவர் அதிகாரிகளுக்கு அளித்தார்.
அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அந்த கல்லூரியின் டீன் ஆக பதவியேற்றார். அவருக்கு முன்பு டீனாக இருந்த டாக்டர் டி.கே. சகலே கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லிக்கு வந்த அருண் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது படுக்கை அருகே விஸ்கி மற்றும் சில மருந்துகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வியாபம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட மற்றும் சாட்சியங்களாக இருந்த 33 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் ஊழல் குறித்து செய்தி சேகரித்த டிவி டுடே குழும செய்தியாளர் அக்ஷய் சிங் நேற்று மதியம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்திடம் பேட்டி எடுத்துள்ளார். அதன் பிறகு அவர் திடீர் என இறந்துவிட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications