ஹர்ஹத் உல் அன்சார் இயக்கத்தின் முடிவும் லஷ்கர் இ தொய்பாவின் விஸ்வரூபமும்..
டெல்லி: தீவிரவாத இயக்கமான ஹர்ஹத் உல் அன்சார் அமைப்புக்கு அளித்த ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து லஷ்கர் இ தொய்பா இயக்கம் உருவெடுத்தது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தகவல்கள் தெரிவிக்கின்றன.
1990களில் இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்துக்கு பாகிஸ்தான் ஹர்ஹத் உல் அன்சார் என்ற தீவிரவாத அமைப்பை ஊக்குவித்து வந்தது. காஷ்மீரிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் இந்த ஹர்கத் உல் அன்சார் அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்த அமைப்புக்கு சுமார் 60 ஆயிரம் டாலரை பாகிஸ்தான் நிதி உதவியாக அளித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஹர்ஹத் உல் அன்சார் அமைப்பான விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. இதனால் பாகிஸ்தான் அச்சப்பட்டு இந்த அமைப்பை ஒதுக்கி வவத்தது.
இதன் பின்னரே ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன், ஜெய்ஷி இ முகமது ஆகிய அமைப்புகள் உருவாகின. ஹர்கத் உல் அன்சார் அமைப்பில் இருந்த தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் ஹர்ஹத் உல் முஜாஹிதீன் அமைப்பில் இருக்கின்றனர்.
இருப்பினும் ஒரிஜினல் ஹர்ஹத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீருக்கு எதிரான அல் பஹ்ரான் என்ற அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளை பிரித்து வைப்பதும் பின்னர் ஒரே அமைப்பாக்குவதும் என்கிற வேலையை பாகிஸ்தான் உளவு அமைப்பனா ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து செய்து வருகிறது.
ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்புதான் பல்வேறு முக்கிய தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. இதுதான் கந்தகார் விமானக் கடத்தலை முன்வைத்து மவுலானா மசூத் அன்சாரை விடுவித்தது.
இதற்குப் பிறகுதான் மவுலானா மசூத் அன்சார், ஜெய்ஷி- யே- முகமது அமைப்பை தொடங்கினார். இப்படி இருந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து லஷ்கர் இ தொய்பா அமைப்பை உருவாக்கியது பாகிஸ்தான்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஹர்ஹத் உல் அன்சார் அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் மறு உருவாக்கமாக லஷ்கர் இ தொய்பா விஸ்வரூபமெடுத்துள்ளது.
இவ்வாறு சி.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications