மோடி சர்க்காரின் 'நந்தன் நிலகேணி'யாகிறார் ஹெச்.டி.எப்.சி. தீபக் பரேக்
டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் "நந்தன் நிலகேணி'க்கான இடத்தை ஹெச்.டி.எப்.சி. தலைவர் தீபக் பரேக் பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நந்தன் நிலகேணி ஆதார் திட்டத்தின் தலைவராக இருந்தார். அப்போதும் ஹெ.சி.டி.எப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் ஏற்கெனவே அரசு நியமித்த பல ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார்.
தற்போது மோடி பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கான பிரதான ஆலோசகர்களில் ஒருவராக தீபக் வருவார் என்று கூறுகிறார் மும்பை பங்குச் சந்தை உறுப்பினரும் பொருளாதார வல்லுநருமான ரமேஷ் தமானி. அதேபோல் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த அருண் ஷோரி வசம் நிதித்துறை கொடுக்கப்பட்டால் பொருளாதார மேம்பாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பில் சுஷில்மோடியும் ஏராளமாக செய்திருக்கிறார். அவருக்கும் மோடி அரசில் முக்கியத்தும் கிடைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.