அரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு
மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
Recommended Video

டெல்லி: மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
பாதுகாப்பு துறை இதற்கான கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இந்திய ராணுவத்தில் தற்போது பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்த பற்றாக்குறையை போக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வடகொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் இருக்கிறது.

பற்றாக்குறை நிலவுகிறது
தற்போது இந்திய ராணுவத்தின் மூன்று படைகளிலும் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. ராணுத்துவத்தில் 7,679 பேர் குறைவாக இருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை கூறியுள்ளது. அதேபோல் கப்பல் படையில் 1,434 பேர் குறைவாக இருக்கிறார்கள். விமான படையில் 146 பேர் குறைவாக இருக்கிறார்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகமாகும்.

எடுக்கலாம்
இதனால் மத்திய அரசு பணிகளில் வேலை செய்ய இருக்கும் பணியாளர்களை ராணுவத்தில் எடுக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்து இருக்கிறது. இவர்கள் கட்டாயமாக ஐந்து வருடம் வேலை செய்தால் இந்த பற்றாக்குறை குறையும் என்று பாதுகாப்பு துறை கருத்து தெரிவித்து இருக்கிறது.

எந்த பணியாளர்கள்
மத்திய அரசு பணியாளர்கள் மட்டுமில்லாமல் மாநில அரசு பணியாளர்களும் இதில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். எந்த விதமான பணியாளர்கள் ராணுவத்திற்கு தேர்வாவார்கள் என்று கூறப்படவில்லை. மத்திய அரசில் இருந்து 70 சதவிகித பணியாளர்களும், மாநில அரசில் இருந்து 30 சதவிகித பணியாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

கையெழுத்தாகவில்லை
தற்போது பாதுகாப்பு துறையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறது. ஆனால் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இன்னும் இதில் முடிவு செய்யவில்லை. பெரும்பாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications