பட்டாசு தடைக்கு நடுவேயும், மாசு பல மடங்கு அதிகரிப்பு.. அபாய கட்டத்தில் டெல்லி சுற்றுச்சூழல்!
தீபாவளிக்குப் பின் டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசமான நிலையை அடைந்து அபாயக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தற்போது அபாயக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் நேற்று இரவில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றில் மிகவும் அதிக அளவில் மாசு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்ததிலேயே மிகவும் அதிக அளவு எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் வெடி வெடிக்க உச்ச நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பின்பும் கூட காற்று இந்த அளவுக்கு மாசு அடைந்துள்ளதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் வெடிகளுக்கு தடை
டெல்லியில் கடந்த சில மாதங்களாக மோசமான சுற்றுச்சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பலருக்கும் சுவாசக் கோளாறு, சைனஸ் என நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதையடுத்து தீபாவளி நாட்களில் டெல்லியின் சுற்றுச்சுழல் இன்னும் அதிக அளவில் மாசுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் வெடி வெடிக்கவும், வாங்கும் தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதி மன்றம்.

தடையை மீறி வெடி
இந்தச் சட்டத்தை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் காலையில் இருந்து மாலை வரை பெரும்பாலான இடங்களில் இந்தச் சட்டம் மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிறைய இடங்களில் மக்கள் வெடி வெடிக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் டெல்லியின் சில பகுதிகளில் வெடி வெடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் மக்கள் வெடி வெடித்து இருக்கிறார்கள்.

டெல்லியில் மோசமான சூழல்
டெல்லியின் அருகாமை பகுதிகளான நொய்டா, பரிதாபாத் போன்ற இடங்களிலும் அதிக அளவில் வெடி வெடிக்கப் பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் இரவில் காற்றின் மாசு 350 யூனிட்டுகளுக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இந்த அளவு 450 யூனிட்டுகளை தொட்டிருக்கிறது. டெல்லியில் ஒரே நாளில் 10 மடங்கு அளவிற்கு மாசு அதிகம் ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது டெல்லியின் சுற்றுச்சுழலுக்கு மிகவும் மோசமான காலகட்டம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி விரைவில் சீரடையும்
இந்த நிலை இன்னும் 48 மணி நேரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பக்கத்து மாநிலங்களில் நடக்கும் சுற்றுச்சுழல் மாற்றம் காரணமாக டெல்லியின் சுற்றுச்சுழல் விரைவில் சரியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவரை டெல்லி மக்களுக்கு இந்த காற்று மாசு காரணமாக சிறிய அளவிலான உடல் உபாதைகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications