Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி தாக்குதல்.. பயங்கரவாதி உமர் பணியாற்றிய பல்கலைக்கழக நிறுவனர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு தற்கொலை படை தாக்குதல் தான் என்பது உறுதி செய்துள்ளது. மேலும் அந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் என்பவன் தான் நடத்தியது உறுதியாகி உள்ளது. இந்த உமர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அதன் நிறுவனர் ஜாவேத் அஹகமது சித்திக்கை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் கடந்த 10ம் தேதி மாலையில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. இந்த கார் வெடிப்பில் 10 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர்.

delhi-blast-case-ed-arrests-al-falah-founder-jawad-ahmad-siddiqui-under-pmla-act

இதன் பின்னணியில் பயங்கரவாத சதி இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. டெல்லி போலீசார், என்ஐஏ உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் உன் நபி என்பவன் தான் கார் வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.

தற்கொலை படை தாக்குதலாக அவன் இந்த தாக்குதலை நடத்தினான்., டாக்டரான அவன் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து உமருக்கு உதவி செய்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். உமருக்கு கார் வழங்கிய அமீர் ரஷித் அலி என்பவனை என்ஐஏ கைது செய்தது.

இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது உமர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தின் நிறுவனர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜாவித் அஹமது சித்திக். இவரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனம் ஜாவேத் அஹமது சித்திக்கின் வீடு, அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். ரூ.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிவைசஸ் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த பல்கலைக்கழகத்துக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து சட்டத்துக்கு அப்பாற்பட்டு ஜாவேத் அஹமது சித்திக் தனது குடும்பத்தினருக்கும், அவர்களின் நிறுவனத்துக்கும் பணத்தை மாற்றி இருப்பது தெரியவந்தது. இந்த சோதனையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத செயலுக்கும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பாக டெல்லி செங்கோட்டை அருகே உமர் நிகழ்த்திய கார் வெடிப்பு சம்பவத்துக்கு பணம் சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் சட்டவிரோதமாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+