திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!
டெல்லி: நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை நாளை தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
நாட்டை உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 3 குற்றவளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இதற்காக டெல்லி திகார் சிறையில் ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

டெல்லி திகார் சிறையில் நாளை காலை 6 மணிக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. பவன் குப்தா என்ற குற்றவாளி, தாம் குற்றம் நடந்த போது மைனர் என்பதால் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் எஞ்சிய 3 குற்றவாளிகளும் தங்களுக்கு தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற தடை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் 3 குற்றவாளிகள் மட்டும் நாளை தூக்கிலிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் டெலி நீதிமன்றமோ, ஒரே வழக்கில் வெவ்வேறு நாட்களில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது; ஆகையால் மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்பயா வழக்கில் 2-வது முறையாக குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications