டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா?
டெல்லி: டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில் பெண்களுக்காக என்று தனியாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
கிழக்கு டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலின் தரை தளத்தில் பெண்களுக்கு என்று பிரத்யேக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அந்த கடையில் பெண்கள் மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும். பிற கடைகளுக்கு சென்று ஆண்களின் விமர்சனங்களுக்குள்ளாகி அவதிப்படும் பெண்களுக்காக இந்த கடை திறக்கப்பட்டுள்ளதாம்.

இது குறித்து கடை உரிமையாளர் ரோஹித் அரோரா(36) கூறுகையில்,
தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பெண்கள் தான் மது வாங்குகிறார்கள். ஆனால் இன்னும் 4 முதல் 5 மாதங்களில் விற்பனை நிச்சயம் சூடுபிடித்துவிடும். என் கடை குறித்த தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் இனி ஏராளமான பெண்கள் வந்து மது வாங்குவார்கள் என நம்புகிறேன் என்றார்.
கடையில் நல்ல வகை மதுபானங்கள் வைத்துள்ளனர். ஆனால் விலை குறைவான மது வகைகள் இல்லை. இதனால் பணம் படைத்த பெண்கள் மட்டுமே இந்த கடையில் மது வாங்க முடியும் என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை ஷிப்ரா தெரிவித்துள்ளார்.
கடையின் சுவர்கள் கண்ணாடியால் ஆனவை. அதனால் ஆண்கள் கடைக்கு வெளியே நின்று மது வாங்கும் பெண்களை பார்க்க முடியும். இதற்கு நான் ஆண்கள் வரும் கடைக்கு சென்றே மது வாங்குவேன் என்கிறார் 20 வயது மாணவி ஷெபாலி.












Click it and Unblock the Notifications