ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் கேஜ்ரிவாலுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!!
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் 3 வாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 14 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்தவர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இவரது பதவி காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் கமிஷனையும் கேஜ்ரிவால் அமைத்துள்ளார்.

இதனிடையே தம் மீதான ஊழல் புகார்களை நிராகரித்துள்ள அருண்ஜேட்லி, கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கை நேற்று தொடர்ந்தார்.;'
இவ்வழக்கை இன்று ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 3 வாரங்களுக்குள் அனைவரும் பதிலளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 6-ந் தேதி நடைபெறும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்காக எந்த ஒரு கட்டணமுமில்லாமல் ஆஜராகப் போவதாக மூத்த வழக்கறிஞரும் பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு நீக்கப்பட்டவருமான ராம்ஜேத்மலானி ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications