ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்க... டெல்லி ஹைகோர்ட்டில் திடீர் மனு- இன்று விசாரணை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை நடைபெறும் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை நடைபெறும் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோவை முகமது ரஃபீக் என்பவர் திடீரென நேற்று ஒரு நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை எனக்கூறி கடந்த முறை ஆர்.கே. நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Delhi HC today to hear plea against RK Nagar by poll

மேலும் ஆர்.கே.நகரில் நிலைமை சீரான பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் ஆர்.கே.நகரில் தற்போதும் நிலைமைகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவே இல்லை.

இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள்தான் தற்போதும் போட்டியிடுகிறார்கள் ஆகையால் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கடந்த முறை 35 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+