காற்று மாசுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த கோஹ்லி!
டெல்லி: டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சுவாசிக்கவே முடியாத நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பால் காற்று மாசுபடுவது ஒரு காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தனியார் போக்குவரத்தை விடுத்து மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
#Delhi, we need to talk! #MujheFarakPadtaHai pic.twitter.com/Q5mkBkRRIy
— Virat Kohli (@imVkohli) November 15, 2017
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், டெல்லியின் நிலை என்ன என்பது நமக்கு நிச்சயம் தெரியும். நிறையப்பேர் இது ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விவாதித்து மட்டும் வருகிறார்கள். மாசுபாட்டிற்கு எதிரான இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து விளையாடினால் மட்டுமே இது முடியும்.
டெல்லியில் நிலவி வரும் மாசுபாட்டைக் குறைப்பது நமது கடமை. மக்கள் இந்த நேரத்தில் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த வேண்டும். பேருந்து, மெட்ரோ, ஓலா ஷேர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது இதை மக்கள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். நமது ஒரு சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்திற்கு வ்ழிவகுக்கும் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications