டெல்லியில் 8 மாதங்களில் 1,121 பாலியல் குற்றங்கள் பதிவு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 1,121 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆண்டுகளிலேயே இப்போதுதான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பற்ற நிலை
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நீடிக்கிறது. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் மட்டும் ஆயிரத்து 121 பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன..

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், நீதி வேண்டி துணிவுடன் காவல்நிலையத்தை தேடி வருவதையே இந்த குற்றப்பதிவு அறிக்கை காட்டுவதாக டெல்லி போலிசார் தெரிவிக்கின்றனர்.

13 ஆண்டுகளில் அதிகம்
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக அளவு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2011ம் ஆண்டு
2010ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 507 குற்ற வழக்குகளும், 2011ம் ஆண்டு 572 குற்றவழக்குகளும் பதிவாகியுள்ளன.

2012ம் ஆண்டு
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது. டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர் அதிக அளவில் பாலியல் குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன.

குற்றவாளிகள் கைது
கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications