உலகிலேயே டெல்லி காற்று தான் மோசமாம்: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்
டெல்லி: உலகிலேயே டெல்லியில் தான் காற்று அதிகம் மாசு அடைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டில் உலகில் உள்ள 1,600 நகரங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் இருப்பதிலேயே டெல்லியில் தான் காற்று அதிகம் மாசுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவை விட டெல்லியில் காற்று 10 மடங்கு அதிகம் மாசுபட்டுள்ளது. மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பிஎம் 2.5 என்ற பொருள் டெல்லியில் வீசும் காற்றில் அதிகம் உள்ளது.
காற்றில் சிறிய அளவில் திரவம் அல்லது திடப் பொருள் இருப்பதை தான் பி.எம். என்கிறார்கள். இந்த பொருட்கள் கார்பன், சல்பர், நைட்ரஜனால் ஆனதாக இருக்கலாம். சுற்றுச்சூழல் மாசால் புற்றுநோய், இதயநோய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.
டெல்லியில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காற்று மாசுபட முக்கிய காரணம் ஆகும். டெல்லி சாலைகளில் தினமும் 85 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், 1,400 கார்களும் ஓடுகின்றன.
இது தவிர குப்பைகள் எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவையும் காற்றை மாசுபட வைக்கின்றன.












Click it and Unblock the Notifications