டெல்லியில் சாதி அரசியலைத் தாண்டிய வர்க்க அரசியல் ஓங்கியிருக்கிறது... யோகேந்திர யாதவ்
டெல்லி: சாதி அரசியலைத் தாண்டி வர்க்க அரசியல் ஓங்கியதாக டெல்லி அரசியல் இருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் சித்தாந்தவாதியான யோகேந்திர யாதவ் தமது அரசியல் பயணம் குறித்து விவரித்திருக்கும் பேட்டியின் ஒரு பகுதி:

ஆம் ஆத்மி கட்சி ஏராளமான நடுத்த வர்க்க தொழில்முறையாளர்களை அரசியலுக்கு ஈர்த்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பதுறையை சேர்ந்தவர்கள், நிர்வாகவியல் சார்ந்தவர்கள்.
வழக்கமான சமூக செயற்பாட்டாளர்களுக்கு அப்பால் புதிய செயற்பாட்டாளர்கள் களம் ஒன்று உருவாகி இருக்கிறது. இதைத்தான் அம் ஆத்மி கட்சி சாதித்தும் இருக்கிறது. டெல்லி அரசியல் என்பது சாதி அரசியலைத் தாண்டிய வர்க்க அரசியலாக இருக்கிறது.
நான் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் போதே டெல்லி தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தோம். தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அறிவியல்பூர்வமான கருத்து கணிப்புகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவும் விரும்பினோம்.
அனைவரும் ஏற்றுக் கொண்டோம். அப்போது நாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் 14% ஆதரவு இருந்தது. இது எங்களுக்கு ஊக்கமாக இருந்தது.
கடந்த ஏப்ரல், ஜூலை மாதம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது அரவிந்த் கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அவர்களோடு நானும் இணைந்து கொள்ள விரும்பினர்.
என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் சிறிய சக்திகளாக இருப்பவர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷண் ஆகியோரையும் பார்க்கிறேன்.
டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வசம் இருந்த இஸ்லாமியர் வாக்கு வங்கி இப்போது கை மாறியிருக்கிறது. படித்த, இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல ஈர்ப்பு இருப்பதை உணர முடிகிறது. அதே போல்தான் தலித்துகளிடத்திலும்.
அத்துடன் எங்கள் கட்சியின் துடைப்பம் சின்னமும் வால்மீகி இனத்தவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. டெல்லியில் தலித்துகளிடம் 32% ஆதரவை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்றார்.
-
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு!












Click it and Unblock the Notifications