டெல்லி: 10ம் வகுப்பு மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கி முனையில் பலாத்காரம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பத்தாம் வகுப்பு மாணவியை துப்பாக்கி முனையில் 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற கும்பல் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அதை செல்போனிலும் படம்பிடித்துக்கொண்டனர். சிறுமியை அதே இடத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அந்தப் பக்கமாக சென்ற சிலர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
5 குற்றவாளிகளில் இருவர் சிறுவர்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றவாளிகளை தீவிரமாக தேடிய போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய இருவரை தேடிவருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications