பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்
டெல்லி: மதுவிலக்கை வலியுறுத்தி பாடியதால் கைது செய்யப்பட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பாக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகரான கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பாடிய பிரசார பாடலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவனை விடுதலை செய்யக்கோரி நேற்று டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் 50 மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் தமிழ்நாடு இல்லத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்துக்குள் நுழைந்துவிடாதபடி போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன் கோவனின் 'மூடு.. டாஸ்மாக்கை மூடு...' பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து துண்டு பிரசுரங்களாகவும் அந்த மாணவர்கள் டெல்லியில் விநியோகித்தனர்.












Click it and Unblock the Notifications