ரூ400 கோடி குடிநீர் டேங்கர் ஊழல்: ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை!!
டெல்லி: குடிநீருக்கான டேங்கர்களை வாங்கியதில் ரூ400 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லிவாசிகளுக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய டேங்கர்கள் வாங்க தனியார் நிறுவன்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து இம்முறைகேடு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையின் முடிவில் ஷீலா தீட்சித் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், குடிநீர்வாரிய முன்னாள் தலைவர் மைதீன் அகமத் ஆகியோர் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய தற்போதைய டெல்லி குடிநீர் வாரிய தலைவர் கபில் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications