For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகளில் இதுவரை டெபாசிட்டான பணம் எவ்வளது தெரியுமா? மத்திய அமைச்சர் தகவல்

4 லட்சம் கோடு ரூபாய் வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்புடன் கூடிய இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி திடீரென அறிவித்தார். அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் பெற்றுச் செல்கின்றனர்.

Demonetisation of currency notes showing result: Prasad

முதலில் ஒரு நாளைக்கு ரூ 4000 வரை பழைய நோட்டுகள் மாற்றலாம் என அரசு அறிவித்திருந்தது. பின்னர் அதை ரூ 2000 ஆக குறைத்தது. இந்நிலையில், தற்போது புதிய ரூ 2000 நோட்டுக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூபாய் மதிப்பு 4 லட்சம் வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிருந்தது.

இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கைக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரரவிசங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு மாற்றம் நடைமுறைக்கு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது. இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் பழைய நோட்டுகள் எல்லாம் தற்போது தூய பணமாக மாறியுள்ளது. தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸேட்டுகள் மற்றும் இதர தீவிரவாத குழுக்களின் நிதி ஆதாரம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

English summary
The decision to demonetise Rs 500 and Rs 1000 currency notes has started showing results and Rs 4 lakh crore has come to banks, Law Minister Ravi Shankar Prasad said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X