வங்கிகளில் இதுவரை டெபாசிட்டான பணம் எவ்வளது தெரியுமா? மத்திய அமைச்சர் தகவல்
4 லட்சம் கோடு ரூபாய் வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்புடன் கூடிய இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி திடீரென அறிவித்தார். அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் பெற்றுச் செல்கின்றனர்.

முதலில் ஒரு நாளைக்கு ரூ 4000 வரை பழைய நோட்டுகள் மாற்றலாம் என அரசு அறிவித்திருந்தது. பின்னர் அதை ரூ 2000 ஆக குறைத்தது. இந்நிலையில், தற்போது புதிய ரூ 2000 நோட்டுக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூபாய் மதிப்பு 4 லட்சம் வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிருந்தது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கைக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரரவிசங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு மாற்றம் நடைமுறைக்கு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது. இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் பழைய நோட்டுகள் எல்லாம் தற்போது தூய பணமாக மாறியுள்ளது. தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸேட்டுகள் மற்றும் இதர தீவிரவாத குழுக்களின் நிதி ஆதாரம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications