மகள் திருமண செலவுக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி பலி
பஞ்சாப் மாநிலத்தில் பணம் எடுக்க வங்கிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
லூதியானா: மகள் திருமணத்திற்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் ஆஷா ராணி என் பெண் தனது மகளின் திருமண செலவுக்காக பணம் எடுக்க பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு பணம் எடுப்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஆஷா ராணியும் நின்றிருக்கிறார். அப்போது, கூட்ட நெரிசல் அதிகமானதால் பெரிய ரகளை ஒன்றும் ஏற்பட்டுள்ளது.

இந்த ரகளையின் போது, கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், ரகளையை கட்டுப்படுத்தவும் வங்கியின் காவலாளி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஆஷா ராணி தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, கூட்ட நெரிச்சலை ஒழுங்குப்படுத்திய வங்கி காவலாளி தள்ளிவிட்டதால்தான் ஆஷா ராணி காயமடைந்து மரணம் அடைந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர்கள் போலீசிலும் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.
பழைய நோட்டை மாற்ற வரிசையின் நின்றும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுக்க கூட்டத்தில் அகப்பட்டும் ஏற்கனவே 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications