500, 1000 ரூபாய் நோட்டுகளை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் பாவம் நீங்கி விடாது: மோடி பொளேர்
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் ஊழல் வாதிகள் தூக்கம் இழந்திருப்பதாகவும், ஆனால் இந்த முடிவுக்கு ஏழை-எளிய மக்கள் தமக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்
காசிப்பூர்: 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருப்பதால் ஊழல்வாதிகள் தூக்கம் இழந்திருப்பதாகவும்,காங்கிரஸ் ஊழல் வாதிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருவதாகவும், ஏழை எளிய மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பரிவர்தன் யாத்திராவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அதிக மதிப்புள்ள பண நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது முதல் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்கி வருகின்றனர் என்றும், பணக்காரர்கள் தூக்கம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டு அதற்ககாக தம்மை குறைகூறி வரும் எதிர்கட்சிகளை ஏளனமாக பேசிய பிரதமர் மோடி, மக்கள் இவ்விவகாரத்தில் எதிர் கொண்டு வரும் இன்னல்களை தாம் அறிந்து உள்ளதாகவும் கூறினார்.
சில அரசியல் கட்சிகள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக வசூலித்து வைத்துள்ள கோடிக்கணக்கான பணம் வீணாகி குப்பைத் தொட்டியில் போட வேண்டியிருப்பதால் அதிக கவலை கொண்டுள்ளதாக மோடி சாடினார்.
பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலர் முகமலர்ச்சியுடன் வரவேற்றுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும், அவர்களது கட்சித் தொண்டர்களை இந்த நடவடிக்கைக்கு எதிராக தூண்டி விட்டு வருவதாக, யாரையும் குறிப்பிட்டுப் பேசாமல் மோடி குற்றம் சுமத்தினார்.
செல்வாக்கு மிக்க மக்களை இந்த நடவடிக்கை பாதித்துள்ளதாகவும், தாம் ஏழை-எளிய மக்களுக்காக போராடி வருவதாகவும் அவர் சொன்னார். அதிக பணம் வைத்துள்ள செல்வாக்கு மிக்கவர்களால் தாம் பெரும் இன்னல்களை சந்திப்பேன் என தெரிந்தும் ஏழை மக்களுக்காக இந்த போராட்டத்தில் இறங்கி இருப்பதாக மோடி சுட்டிக்காட்டினார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் அவர்களது பாவம் நீங்கி விடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications