பூதாகரமாகும் ரூபாய் நோட்டு விவகாரம்... நாடாளுமன்றம் 14வது நாளாக முடங்கியது
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக 14வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாரமாகி வருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் 14வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு செல்லாது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர நாடாளுமன்றத்திற்கும் வெளியிலும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய 13 நாட்களில் ஒரு நாள் மட்டுமே ராஜ்ய சபாவிற்கு பிரதமர் மோடி வந்தார். அதே போன்று லோக் சபாவிற்கு ஒரு நாள் வந்தார். அவ்வளவுதான். மோடி அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மோடியின் இந்தப் போக்கை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், எதிர்க்கட்சிகளை தவறாக விமர்சனம் செய்து வரும் மோடியை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை தொடங்கிய சில நிமிடங்களில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் குறித்து தவறாக பேசி வரும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரின.
இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, ராஜ்ய சபா மற்றும் லோக் சபா ஆகிய 2 அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications