'ரூபாய் நோட்டு செல்லாது' விவகாரம்.. திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைக் கண்டித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே உள்ள காந்தி சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக தினம் ஒரு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் மக்களின் துயர் தீர்ந்தபாடில்லை.

இப்படி கடுமையான சூழலில்தான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று கூட்டம் தொடங்கியதுமே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அவைகளில் உள்ளே அனல் வீசிக் கொண்டிருக்கும் போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலையின் முன்பு மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்றார். பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சி உள்பட 13 கட்சி பிரதிகள் மமதாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications