தீவிரவாதத்தை ஒடுக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம்... ஆசியாவின் இதயம் மாநாட்டில் மோடி
அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று ஆசியாவின் இதயம் மாநாட்டில் மோடி கூறியுள்ளார்.
அமிர்தசரஸ்: நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஆசியாவின் இதயம் என்ற மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ப்பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமர்தசரஸ் நகரில் ஹார்ட் ஆப் ஆசியா என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

ஆப்கானின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அமிர்தசரஸ் மாநாடு உதவும். அந்நிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆப்கானை பாதுகாக்க வேண்டும். ஆப்கானிஸ்தானையும் அதன் மக்களையும் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகநாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மீது கவனம் குவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது அமைதியாகும். அந்நாட்டிற்கான அமைதியையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட இந்தியா உறுதி மேற்கொள்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். நாம் அமைதியாக இருந்தால் தீவிரவாதம் வலுபெற்றுவிடும்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை இந்தியா கட்டிக் கொடுத்தது. இது இந்திய ஆப்கானிஸ்தான் உறவை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து வர்த்தக மேம்பாடு அடைய ஆப்கானிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த மாநாட்டை ஆப்கானிஸ்தான் பிரதமர் அஸ்ரப்புடன் இணைந்து தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று பேசினார்.
முன்னதாக, இந்த மாநாட்டிற்கு வந்தவர்களிடம் வரவேற்பு உரையாற்றினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.












Click it and Unblock the Notifications