சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி களத்தில் இறக்கப்பட்ட கிரிமினல் வேட்பாளர்கள்!
டெல்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றோரை பதவி நீக்கம் செய்வது ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கிரிமினல் வேட்பாளர்களை களம் இறக்குவதை விடுவதாக இல்லை.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றோர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர முயற்சித்தது. அந்த முயற்சியைத்தான் முட்டாள்தனமான முடிவு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு தமது முடிவை திரும்பப் பெற்றது. பின்னர் தண்டனை பெற்ற எம்.பிக்களின் பதவிகளை நீக்கம் செய்தும் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

கிரிமினல்கள் ஆதிக்கம்
இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கிரிமினல் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கின்றன பிரதான அரசியல் கட்சிகள்.

ம.பி.யில் 243
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோரில் 243 பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கின்றனர்.

காங். அதிகம்
இப்படி நிறுத்தப்பட்ட கிரிமினல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் அதிகம். காங்கிரஸ் கட்சி 91, பாஜக 61. பகுஜன் 54 கிரிமினல் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 113 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங். ஆதிக்கம்
இவர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் 18, பாஜக சார்பில் 13 பேர் வேட்பாளர்கள்.

மிசோரமும் கூட..
மிசோரமில் 142 வேட்பாளர்களில் மூவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இப்படிப்பட்ட கிரிமினல்கள் வெற்றி பெற்று அவர்கள் மீதான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பதவி பறிபோகும் என்று தெரிந்தே கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கியிருக்கின்றன.












Click it and Unblock the Notifications