கர்நாடகா அணைகளை திடீரென ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்த தேவகவுடா!
மைசூரு: கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாண்டியாவில் 7-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை பார்வையிட்டார்.
அப்போது அணைகளின் நீர்ப்பாசன பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கே.ஆர்.எஸ். அணை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடக அரசு நடப்பது அவசியமாகும். அது மாநில அரசின் கடமையும் கூட.
காவிரி பிரச்சினை தொடர்பாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கர்நாடகத்திற்கு வாதாடும் மூத்த வழக்கறிஞர் நாரிமனுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துள்ளேன். அவர் சரியான முறையில் வாதாடி வருகிறார். அவர் இங்குள்ள நீர் நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து பிரதமருக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார் என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications