மகாராஷ்டிராவில் பாஜக வென்றால் தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வர்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவரான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக வாய்ப்பிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே. அவர் மறைவைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் போட்டியில் நிதின் கட்காரி, தேவேந்திர பட்னவாஸ் பெயர்கள் அடிபட்டன.

அதே நேரத்தில் பாஜகவும் இதுவரை யாரையும் முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தவும் இல்லை. சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பாஜகவே ஆட்சி அமைக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசியலுக்கு இனி திரும்பப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாஜக வென்றால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மிக நெருக்கமான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகக் கூடும் என்று கூறப்படுகிறது. 44 வயதாகும் தேவேந்திர பட்னவிஸ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை.
இதேபோல் ஹரியானா பாஜகவில் ராவ் இந்தர்ஜித்சிங் மற்றும் கேப்டன் அபிமன்யூ ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications