அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தமது 75 வயது நிறைவடையும் செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்வார்; புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது என உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்துகளை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: ஒரு குடும்பத்தில் அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசு பற்றி யாரும் பேசுவார்களா? அதுபோல்தான்.. பிரதமர் நரேந்திர மோடி தற்போதும் மட்டுமல்ல 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற பின்னரும் பிரதமராக நம்மை ஆட்சி செய்வார். ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார்.

முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் எம்பி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்றுதான் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, தமக்கு செப்டம்பர் மாதம் 75 வயது நிறைவடைவதால் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் புதிய பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா செய்யும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் புதிய பிரதமராவார். இவ்வாறு சஞ்சய் ராவத் எம்பி கூறினார். இதனைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஹூசைன் தல்வாய் கூறுகையில், சஞ்சய் ராவத் கூறுவது சரியான கருத்துதான். பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டாலே ஓய்வு பெறுவது வழக்கம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் வயதாகிவிட்டது; ஆகையால் அவரும் தமது ஓய்வு குறித்து சிந்தித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு. விஹெச்பி, பஜ்ரங்க் தள் போன்ற வன்முறை அமைப்புகளை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்றார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்; முன்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவரையே பிரதமராக்க விரும்பியதாகவும் கூறப்பட்டது. நிதின் கட்கரியே தம்மை பிரதமராக்க சிலர் விரும்பியதாக வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications