அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தமது 75 வயது நிறைவடையும் செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்வார்; புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது என உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்துகளை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: ஒரு குடும்பத்தில் அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசு பற்றி யாரும் பேசுவார்களா? அதுபோல்தான்.. பிரதமர் நரேந்திர மோடி தற்போதும் மட்டுமல்ல 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற பின்னரும் பிரதமராக நம்மை ஆட்சி செய்வார். ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார்.

முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் எம்பி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்றுதான் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, தமக்கு செப்டம்பர் மாதம் 75 வயது நிறைவடைவதால் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் புதிய பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா செய்யும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் புதிய பிரதமராவார். இவ்வாறு சஞ்சய் ராவத் எம்பி கூறினார். இதனைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஹூசைன் தல்வாய் கூறுகையில், சஞ்சய் ராவத் கூறுவது சரியான கருத்துதான். பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டாலே ஓய்வு பெறுவது வழக்கம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் வயதாகிவிட்டது; ஆகையால் அவரும் தமது ஓய்வு குறித்து சிந்தித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு. விஹெச்பி, பஜ்ரங்க் தள் போன்ற வன்முறை அமைப்புகளை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்றார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்; முன்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவரையே பிரதமராக்க விரும்பியதாகவும் கூறப்பட்டது. நிதின் கட்கரியே தம்மை பிரதமராக்க சிலர் விரும்பியதாக வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
IND VS NZ Final: 2023 உலககோப்பை பைனல் போல்.. நேரில் பார்க்கும் பிரதமர் மோடி? நிலவரம் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications