மழை வேண்டி மோடி மாநிலத்தில் நோன்பாளிகள் சிறப்பு பிரார்த்தனை
அகமதாபாத்: குஜராத்தில் புனித ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லீம்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர்.
மாதம் மும்மாரி பெய்த காலம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் பருவமழை காலத்தில் கூட மழை பெய்யாமல் உள்ளது. அதனால் விவசாயிகள் தான் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்நிலையில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.

குஜராத்
குஜராத்திலும் பருவ மழை பொய்த்துள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் புனித ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லீம்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர்.

பள்ளிவாசல்
அகமதாபாத்தில் உள்ள சுல்தான் அகமது ஷா பள்ளிவாசல் முன்பு அமர்ந்து நோன்பாளிகள் குர்ஆனில் இருந்து சில சூராக்களை ஓதினர்.

நம்பிக்கை
அகமது ஷா பள்ளி முன்பு வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் நடக்கும் என்பது குஜராத் மக்களின் நம்பிக்கை ஆகும்.

ரமலான்
மகிமை வாய்ந்த அகமது ஷா பள்ளிவாசல் முன்பு புனிதமான ரமலான் மாதத்தில் கேட்ட துஆ நிச்சயம் கபூலாகும் என்று பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications