ஆதர்ஷ் குடியிருப்பில் சர்ச்சைக்குரிய தேவ்யானி வீடு வாங்கினார்- விசாரணை கமிஷன்
மும்பை: மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவ்யானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே விசா மோசடி புகாரில் அந்த நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கைவிலங்கு போட்டு அழைத்து சென்று, ஆடைகளை அவிழ்த்து சோதனை போட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தேவயானி மும்பையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு வாங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த குடியிருப்பு ஊழல் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் மாராட்டிய முதலர் பிரிதிவிராஜ் சவான் தாக்கல் செய்தார். அதில் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மறைந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
இந்த குடியிருப்பில் 25 வீடுகள் தகுதியில்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதில் ஒருவர் தான் தேவ்யானி ஆவார். மகராஷ்டிரா அரசின் விதிமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடு பெற வேண்டும் என்றால், அவருக்கு சொந்தமாக வேறு வீடு எதுவும் இருக்க கூடாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தேவ்யானிக்கு ஓசிவாரா பகுதியில் ஏற்கனவே குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீட்டை அரசு ஒதுக்கீட்டின் கீழ் தான் அவர் பெற்று இருந்தார். இந்த நிலையில் உண்மையை மறைத்து ஆதர்ஷ் குடியிருப்பிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அவர் வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications