பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குண்டு பாய்ந்து உயிரிழப்பு.. தவறுதலாக சுட்டுக்கொண்டாரா? என்ன நடந்தது?
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏ துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். பஞ்சாப் லூதியானா தொகுதி எம் எல் ஏவான குர்பிரீத் பாஸ்ஸி கோகி தனது துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக சுட்டதில் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எம் எல் ஏ ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக பகவத் மான் உள்ளார். இந்த நிலையில் லூதியானா தொகுதி எம் எல் ஏவாக இருக்கும் குர்பிரீத் மாஸ்ஸி கோகி இன்று அவரது வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட தகவலில் ஆம் ஆத்மி எம் எல் ஏ குர்பிரீத் மாஸ்ஸி கோகி துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக குண்டு உடலில் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "ஆம் ஆத்மி எம்.எல்.ஏ உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பிரதே பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடியவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், எம்.எல்.ஏ குர்பீரித் கோகாய் அறையில் இருந்து திடீரென துப்பக்கி குண்டு சத்தம் கேட்டதால் அவரது அறைக்கு சென்று பார்த்ததாகவும் அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் படுக்கையில் கிடந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த குர்பிரித் கோகி?
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் குர்பிரீத் கோகி இணைந்தார். லூதியானா தொகுதியில் போட்டியிட்ட குர்பிரித் கோகி, அந்த தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவரும் முன்னாள் அமைச்சருமான பாரத் பூஷன் அஷுவை தோற்கடித்து பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
லூதியானா மேற்கு நகராட்சியில் மூன்று மூறை தொடர்ந்து கவுன்சிலராகவும் இவர் இருந்துள்ளார். 2007-2012, 2012-2017, 2017-2022 வரை கவுன்சிலராக இருந்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications