வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே நாகலாந்தில் பாஜகவிற்கு ஒரு எம்எல்ஏ.. எப்படி சாத்தியமானது?
நாகலாந்து மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக ஒரு எம்எல்ஏவை வைத்திருக்கிறது.
அகர்தலா: நாகலாந்து மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக ஒரு எம்எல்ஏவை வைத்திருக்கிறது.இது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்ப்போம்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவிரி 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

59 தொகுதிகள்
இதில் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ திடீரென காலமானார். இதனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீத வாக்குகள் பதிவானது.

பாஜக கணக்கு
நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய பாஜக எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காக்கசே சுமி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

27 ம் தேதி தேர்தல்
இதனால் தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறாமலேயே பாஜகவின் காஜெட்டோ கினிமி வெற்றி பெற்றார். இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்பே நாகலாந்தில் பாஜக ஒரு சீட்டை வென்று கணக்கை தொடங்கி உள்ளது.இதனிடையே நாகலாந்து மாநிலத்தில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது.

முன்னிலை எப்படி
இதில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. இங்கு என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணியே மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications