மதச்சார்பின்மை நோக்கி முன்னேறும் மோடி- திக்விஜய்சிங் திடீர் பாராட்டு
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் போல நேருவின் சிந்தனைகளையொட்டி மதச்சார்பின்மையை நோக்கி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னேறி வருவது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆஜ்தக் -ஹெட்லைன்ஸ் டுடே நடத்திய நிகழ்ச்சியில் திக்விஜய்சிங் தெரிவித்த கருத்துகள்:
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வுப் பணிகள் திருப்தி அளிப்பதாக இல்லை. சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் சட்டசபை தேர்தல் வேறு..லோக்சபா தேர்தல் வேறு.

பாரதிய ஜனதாவில் எத்தனையோ ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உழைத்து ஓய்திருக்கும் நிலையில் திடீரென மோடி முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை. இதற்கு உதாரணம் பிரதமர் மன்மோகன்சிங்.
நாடு விடுதலை அடைந்த பிறகு நிகழ்ந்த மோசமான இரு சம்பவங்கள் காந்தி படுகொலையும்..பாபர் மசூதி இடிப்பும்தான். நாட்டின் மதசார்பின்மை முகத்தையே இவைதான் மாற்றி அமைத்தன. குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டது சட்டவிதிமீறல்தான். அதை அமித் ஷாவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றார்












Click it and Unblock the Notifications