Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு.. காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு..காரணம் இதுதான்!- வீடியோ

    டெல்லி: தவறான தகவலை அளித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

    தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஹோகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டார்.

    ஆனால், நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிக்க கூடாது என கூறி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    நீதிபதி விமலா

    நீதிபதி விமலா

    இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை விமலா அமர்வில் நடக்க கூடாது, ஏனெனில், நீதிபதி விமலாவின் உறவினர் தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ளார் என்று தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் முன் வைத்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.

    ஹைகோர்ட் விசாரிக்கும்

    ஹைகோர்ட் விசாரிக்கும்

    அதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. எனவே சத்யநாராயணன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறும்.

    நீதிபதிகள் கண்டனம்

    நீதிபதிகள் கண்டனம்

    இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில், ஹைகோர்ட் 6 மாத காலத்திற்கு பிறகு தாமதமாக தீர்ப்பு வழங்கியதாக தினகரன் தரப்பு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தவறானது என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குறுக்கிட்டு தெரிவித்தார். 2018, ஜனவரி 23ம் தேதி இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, 4 மாதங்கள் 3 வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என கண்டனத்தை தெரிவித்தனர் நீதிபதிகள்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    இதையடுத்து வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதாக கூறி வாபஸ் பெற்றார். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+