Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது!

வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக எரியோடு போலீசார் 10 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளப்பிவிட்டனர் பாஜகவினர். ஆனால் அப்படி யாரும் தமிழ்நாட்டில் தாக்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு போலீசார் உறுதி செய்தனர். வட இந்தியாவில் இருந்து வந்த பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு குழுக்களும் இதனை உறுதி செய்தனர்.

Dindigul: 10 held for Ganja Supply to North Indian Workers

அதேநேரத்தில் வட இந்தியர் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, வட மாநில தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ் போடுவோம்; பலாத்கார வழக்கு போடுவோம்; தனி ரயிலில் விரட்டி அடிப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமானின் இந்த பேச்சை பீகார் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சீமான் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை கடுமையாக விமர்சித்துள்ள சீமான், வட மாநில இளைஞர்களால் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என கூறியிருந்தார்.

Dindigul: 10 held for Ganja Supply to North Indian Workers

தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோட்டில் கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கும்பலை எரியோடு சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக எரியோடு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், எரியோடு நால்ரோடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வேடசந்தூர், வடமதுரை, திண்டுக்கல்லை சேர்ந்த இந்த 10 பேர் கொண்ட கும்பல், வேடசந்தூர் தாலுகாவில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விநியோகித்து வந்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+