செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது மத்திய அரசு கமிட்டி
டெல்லி: செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் ஏற்படாது என மத்திய அரசு கமிட்டி உறுதி அளித்துள்ளது.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என்று பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வரும் கிரிஷ்குமார் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் செல்போன் கோபுர கதிர்வீச்சால் புற்றுநோய், மூளையில் கட்டி போன்ற ஆபத்துகள் ஏற்படும் என்று அவர் கூறி இருந்தார்.
அதை விசாரித்த கோர்ட், கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை ஆராயவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சிபாரிசு செய்யவும் ஒரு கமிட்டி அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, மத்திய தொலைத் தொடர்பு துறை 13 பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்தது. அதில் பேராசிரியர்கள், மருத்துவர், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், மனுதாரர் கிரிஷ்குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த கமிட்டி தனது கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களின் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. இதுதொடர்பான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. உலக சுகாதார நிறுவனம் அமைத்த குழுவும் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
செல்போன்கள், குறைந்த அளவிலான ரேடியோ அதிர்வு சக்தியை வெளியிடுகின்றன. ஆனால், செல்போன் கோபுரம் வெளியிடும் ரேடியோ அதிர்வு சக்தி அதை விட குறைவானது. ஏனென்றால், கதிர்வீச்சை வெளியிடும் ஆன்டெனாக்கள் செல்போன் கோபுர உச்சியிலோ அல்லது கட்டிட உச்சியிலோ பொருத்தப்படுவதால் பொதுமக்களிடம் இருந்து தூரத்திலேயே உள்ளன.
எனவே, இந்த பொய் பிரசாரம் ஏற்படுத்திய அச்சத்தை போக்க பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications