புகை நகரமான தலைநகரம் - தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் காற்று மாசுபாடு
மக்களின் அதிகப்படியான தீபாவளிக் கொண்டாட்டங்களால் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது.
டெல்லி : தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது. குறிப்பாக ஆனந்த் விஹார் இந்தப்பட்டியலில் 740 புள்ளிகளில் முதல் இடத்தில் இருக்கிறது.
தீபாவளிக் கொண்டாட்டங்களால் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது. தனியார் இணையதளம் ஒன்று டெல்லியின் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறது
நேற்றைய அளவீட்டின்படி, டெல்லி முழுக்க காற்று மிகவும் மோசமாக மாசுபட்டிருக்கிறது. குறிப்பாக ஆனந்த் விஹார் இந்தப்பட்டியலில் 740 புள்ளிகளில் முதல் இடத்தில் இருக்கிறது. இது மிகவும் அபாயகரமானது. இதை அடுத்து பஞ்சாபிபாக் பகுதியும், ஆர்.கே புரம் பகுதியும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. இப்போது வரை அந்தப்பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தடை விதித்த உச்ச நீதிமன்றம்
காற்று மாசுபடுதலைக் குறைக்க கடந்த அக்டோபர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம், நவம்பர் 1 வரை டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இருந்தபோதும் மக்கள் அதனைப்பற்றி கவலை இல்லாமல் பட்டாசுகளை வாங்கி குவித்தனர்.

மோசமடைந்தது
தீபாவளி நாளன்று டெல்லியின் காற்று மாசுபாடு தீவிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாக சூழலியலாளர்கள் முன்கூட்டியே அறிவித்து இருந்தார்கள். அதுபோலவே, நேற்று தீபாவளி பட்டாசுகளால் மிக மோசமாக நிலையை அடைந்தது.

முன்கூட்டியே எச்சரிக்கை
இதுகுறித்து காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கும் மத்திய அரசின் முகமை ஒன்று ஏற்கனவே அரசுக்கு இந்த நிலை குறித்து தெரியப்படுத்தி இருந்தது. அதில் டெல்லியை சுற்றி இருக்கும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நெல் வயல்களை எரிப்பதாலும், காஸிப்பூர் மலைத்தொடர்களில் ஏற்பட்ட காற்றுத்தீயினாலும் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்கள் சுவாசிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று சொல்லி இருந்தது.

யார் யாருக்கு விதிவிலக்கு?
இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை வரை பாதர்பூர் மின்நிலையமும், அது போல டெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளில் டீசல் பயன்பாட்டையும் குறைக்க திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதில் மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications