கெய்ல் எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தேமுதிக சீராய்வு மனு
டெல்லி: தமிழகத்தில் விளைநிலங்கள் வழியே கெய்ல் இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தேமுதிக இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கேரளாவின் கொச்சியில் இருந்து கர்நாடகாவின் மங்களூருக்கு இயற்கை குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல கெய்ல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு குழாய்கள் தமிழகத்தின் 7 மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களில் பதிக்கவும் அது திட்டமிட்டிருந்தது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில் கெய்ல் எரிவாயு குழாய்களை விளைநிலம் வழியே பதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனிடையே தேமுதிகவின் கொள்கைபரப்பு செயலர் சந்திரகுமார், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் கெய்ல் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதி அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications