ஜல்லிக்கட்டு.. சுப்ரீம்கோர்ட்டில் புது வழக்குப் போட்டது தேமுதிக
டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்து.
இதுதொடர்பாக தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜல்லிக்கட்டு, பல நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு. அறுவடைக் காலங்களில் ஒரு திருவிழாவாக நடத்தப்படும் இந்த வீர விளையாட்டுக்காக காளைகளுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. அவை ஒருபோதும் துன்புறுத்தப்படுவது இல்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2011ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது. அந்த அறிவிக்கை மீதான வழக்கில் கடந்த 2014ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தற்போதைய மத்திய அரசு ஜனவரி 7ம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளை அந்த பட்டியலில் இருந்து நீக்கி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது. அந்த அறிவிக்கை மீது சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, எந்த வகையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறுவதாக இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட் தற்போது மத்திய அரசின் அறிவிக்கைக்கு விதித்துள்ள இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு எங்கள் தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications