சம்பளப் பணத்தைக் கேட்டதால் ஆத்திரம்.. வேலைக்கார சிறுமி படுகொலை... டெல்லியில் பயங்கரம்
சம்பளம் கேட்ட வேலைக்கார சிறுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: சம்பளம் கேட்ட வேலைக்காரப் பெண்ணை கொன்று துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்டைச் சேர்ந்தவர் மஞ்சித். இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜார்கண்டில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி டெல்லி அழைத்து வருவதை தொழிலாக செய்து வந்துள்ளார். அவ்வாறு அழைத்து வரப்பட்ட பெண்களை டெல்லியில் வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு, அவர்களது சம்பளத்தை வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.

அந்தவகையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், 13 வயது சிறுமி ஒருவரை டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு அழைத்து வந்துள்ளார் மஞ்சித். வழக்கம் போல, அச்சிறுமியின் சம்பளத்தை அவரது குடும்பத்தாரிடம் அளிக்காமல், இவரே செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக இம்மாதம் 3ம் தேதி மஞ்சித்தை சந்தித்து அச்சிறுமி சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சித், தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அச்சிறுமியை கொலை செய்து, உடலை மூன்று துண்டுகளாக்கி அருகில் இருந்த சாக்கடையில் வீசியுள்ளார்.
கடந்த 4ம் தேதி அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் சாக்கடையில் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளின் அடிப்படையில் மஞ்சித் போலீசாரிடம் சிக்கினார். தற்போது மஞ்சித்தின் கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாரிடம் மஞ்சித் அளித்த வாக்குமூலத்தில், 'சம்பளம் கேட்டதால் அச்சிறுமியைக் கொன்றதாக’த் தெரிவித்துள்ளார். தற்போது மஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications