தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் வேண்டாம்... ட்விட்டரில் சித்தராமையா
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை ஒருபோதும் மேற்கொள்ள கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும்,கன்னட அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்கும் வகையில் அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர்.
இதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு சாலையில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனிடையே சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
I appeal to Twitter users to not support any hate campaign. It is irresponsible and mischievous to support hate messages of any kind.
— CM of Karnataka (@CMofKarnataka) September 11, 2016
காவிரி தண்ணீரைக் கோரும் தமிழகத்தின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை கன்னடர்களோ, கன்னட அமைப்புகளோ ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications