சுனந்தா வழக்கில் தரூர் மீது குற்றம்சாட்டிய எய்ம்ஸ் டாக்டரிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் குப்தாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அண்மையில் அறிவித்தனர்.

சுனந்தாவின் உடலை டாக்டர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து மூன்று அறிக்கைகள் அளித்தன. கடந்த மாதம் 29ம் தேதி அளிக்கப்பட்ட அறிக்கையில் தான் சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் போலீசார் சுனந்தா வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
இந்நிலையில் துணை கமிஷனர் பி.எஸ். குஸ்வாஹ், இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு டாக்டர் குப்தாவிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அவரிடம் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அவருக்கு தரூர் அனுப்பிய இமெயில்கள் குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்ற தரூர் முயற்சி செய்வதாக முன்பு குப்தா தெரிவித்தார். பின்னர் தரூர் தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டார். இது பற்றியும் குப்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சுனந்தா இறந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தரூர் என்னென்ன செய்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications