குடிபோதையில் 8 வயது மகளை எரித்துக் கொன்ற தாய்(எ) பேய்
நெல்லூர்: ஆந்திராவில் குடிபோதையில் பெண் ஒருவர் தனது 8 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒபுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பந்தி சந்திரசேனா. அவர் கணவரால் கைவிடப்பட்டவர். அவர் தனது 8 வயது மகள் சிரிஷாவுடன் வசித்து வந்தார். சந்திரசேனாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்நிலையில் தனது மகள் தான் குடிப்பதை தடுப்பதாக சந்திரசோவுக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
சந்திரசேனா குடிபோதையில் இருந்ததால் அவர் தான் சிறுமி மீது தீ வைத்திருப்பார் என்று கிராமத்தினர் நினைத்தனர். ஆனால் சந்திரசேனாவோ தான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேனாவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications