ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்திக்கு மீண்டும் பணி வழங்கியது உ.பி.அரசு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் துர்கா சக்தி நாக்பால். அம்மாநிலத்தில் உள்ள கடல்பூர் கிராமத்தில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தின் சுற்றுச்சுவரை இடித்ததாக இவரை கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அம்மாநில அரசு இடைநீக்கம் செய்தது.
ஆனால், மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக இவர் பல நடவடிக்கைகளை எடுத்ததால் தான் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்ற கூறப்பட்டது. இதையடுத்து உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் அம்மாநில அரசு இடைநீக்க உத்தரவை திரும்ப பெற மறுத்து வந்தது.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் தனது கணவருடன் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பணி வழங்கி உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications