விதிமீறல் புகார்கள் குறித்து கடைசி வரை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.. மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஆளும் கட்சிக்கு இணையாக, பாஜக-வும் வெற்றி பெற்று மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த முறை நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, மேற்கவங்கத்தில் பாஜக 5-க்கும் குறைவான இடங்களையே வென்றிருந்தது.

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய மம்தா இந்த முறை மேற்குவங்கத்தில் பாஜக வீழ்வது நிச்சயம் என உறுதியாக கூறினார். ஆனால் வெளிவந்த தேர்தல் முடிவுகளை பார்த்து ஆடி போய்விட்டார் மம்தா.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மோடி மற்றும் அமித்ஷா மீது கூறப்பட்ட தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என சாடினார்.
மேற்குவங்கத்தில் எனது தலைமையிலான அரசை மத்தியில் இருந்த பாரதிய ஜனதா அரசு செயல்படவிடவில்லை என்றார். மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து நான் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை.
எனது இந்த முடிவை கட்சியினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே மேற்குவங்கத்தில் அவசர நிலை உருவாக்கப்பட்டது.
இந்து - முஸ்லிம் என்ற கருத்துகளை முன்வைத்து பாஜக நடத்திய பிரிவினை, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு நன்றாக கை கொடுத்துள்ளது. இதனால் வாக்குகளில் பிளவு ஏற்பட்டது என்றார். இந்த நிலை தொடர்பாக எவ்வளவு முறை புகார் கூறியும் தேர்தல் ஆணையம் கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை என சாடினார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications