பாஜகவின் ஜெய்ஶ்ரீராம் பேனர்களுக்கு போட்டியாக பாலக்காடு நகராட்சியில் தேசிய கொடி ஏற்றிய டைஃபி
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், மோடி- அமித்ஷா பேனர்களை ஏற்றியதற்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றினர்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக தக்க வைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பேனர்களை வைத்தனர்.

இந்த வீடியோவை கேரளாவின் குஜராத் பாலக்காடு என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பாஜகவினர் பகிர்ந்தனர். பாஜகவினரின் இந்த நடவடிக்கை குறித்து மாநகராட்சியின் செயலாளர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே பாஜகவினருக்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பறக்கவிட்டு முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications