நில நடுக்க அதிர்வுகள் மேலும் நாலு நாள் நீடிக்கலாம்.. பயம் வேண்டாம்: நிபுணர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாள நாட்டின் நில நடுக்க தாக்கம் இந்தியாவிலும் மேலும் மூன்று அல்லது நாலு நாட்களுக்கு இருக்கும் என்று நிலவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

சென்னையிலும் நந்தனம் உள்ளிட்ட இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியுள்ள நிலவியல் நிபுணர், பெசின் கூறுகையில், "நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்கள், நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்" என்றார்.
சில நிபுணர்கள், இதுபோன்ற அதிர்வுகள் மேலும் ஒரு வாரம் வரை கூட நீடிக்கும் என்கின்றனர். நில தட்டு சரியாக பொருந்தும்வரை இதுபோன்ற அதிர்வுகள் ஏற்படுவது சகஜம்தான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications