For Daily Alerts
Just In
மணிப்பூரில் நில அதிர்வு... 3.2 ரிக்டர் அளவு பதிவு.. பாதிப்ப்பு இல்லை!
மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் நில அதிர்வு இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மாவ்லைக் என்ற இடத்தை மையமாகக் கொண்டு நில நடுக்கம் இன்று ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியா மாநிலமான மணிப்பூரில் லேசான நில அதிர்வாக உணரப்பட்டது. மணிப்பூரில் உள்ள சேனாபதி என்ற மாவட்டத்தில் உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.2 என பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் பொதுமக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
An earthquake measuring 4.7 at Richter in Myanmar, tremor felt in Manipur today.