மிசோரமில் 2-வது நாளாக இன்றும் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.5 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

அய்ஸ்வால் (ஐஸ்வால்): வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்றும் 2-வது நாளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் மற்ரும் மிசோரம் மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

Earthquake of magnitude 5.5 strikes Mizoram

மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Earthquake of magnitude 5.5 strikes Mizoram

இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு மிசோரம் மாநிலத்தில் மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. மிசோரமின் சம்பாய் பகுதியில் இது உணரப்பட்டது.

இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இதனால் மிசோரமில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் வெளியாகவில்லை.

Earthquake of magnitude 5.5 strikes Mizoram

பிரதமர் மோடி பேச்சு

இதனிடையே மிசோரம் மாநில முதல்வர் ஜோரம்தங்காவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி அப்போது உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+