வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பீதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் பீதி ஏற்பட்டது.
சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
நேபாள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அதனை சுற்றிய பகுதிகளில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications