திடீரென அதிர்ந்த காஷ்மீர், லடாக்.. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.. அச்சத்தில் உறைந்த மக்கள்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின், காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் நேற்று லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கிஸ்துவார் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல் நேற்று மாலையும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் பகுதியில் கார்கில் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்து வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆக பதிவானது.












Click it and Unblock the Notifications